ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி, மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர். அந்த கட்சியின் மாநாடுகளில் பேசி இருக்கிறார். நண்பர்கள் சிலருக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். ஆனால் நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால் இந்த முறை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக மலையாள ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை மம்முட்டி மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நான் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். நான் அதை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அதுபற்றி எந்த கருத்தும் சொல்வதில்லை. நான் தீவிர அரசியலில் இப்போதைக்கு ஈடுபடப்போவதில்லை. அதனால் தேர்தலில் போட்டியிடப்போவதுமில்லை.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் என்னை போட்டியிடச் சொல்லி கேட்கவில்லை. பிற்காலத்தில் அரசியலுக்கு வருவேனா தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். நான் சினிமாவில் செய்து கொண்டிருப்பதும் அரசியல் தான். அதை இன்னும் தீவிரமாக செய்வேன். என்றார்.