'சிறை' அக்ஷய் குமாரின் புதிய படம் | பீரியட் படத்தில் நடிப்பது பெருமை : டொவினோ தாமஸ் | 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்த ஆத்மிகா | ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் |

வசந்தபாலன் இயக்கத்தில் புதுமுகம் மகேஷ், அஞ்சலி மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த படம் 'அங்காடித் தெரு'. சென்னை, தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் ஆண்கள், பெண்களின் நிலை பற்றிய நெகிழ்ச்சியான படமாக அமைந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் அது.
தற்போது ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'ஜெயில்' படத்தை இயக்கி முடித்து அடுத்து அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி நகர், ரங்கநாதன் தெருவுக்குச் சென்றதைப் பற்றி பதிவு ஒன்றை முகப்புத்தகத்தில் நெகிழ்வுடன் வெளியிட்டுள்ளார் வசந்தபாலன்.
''புதிய திரைப்படத்தின் ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்காக வேறு வழியின்றி 13 ஆண்டுகளுக்கு பிறகு பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தேன். அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்து தருகிறோம் என்கிற பெண்களின் குரல் என்னை வரவேற்றது. வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கிற ராஜாவையும் சமோசா விற்கும் பெரியவரையும் கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன்.
மனம் அங்காடித்தெரு சூட்டிங் நாட்களை புரட்டிப் பார்த்தது. இன்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இளநீர் குடிக்க நான் முகக்கவசத்தை கழட்டும் போது ஓரிருவர் கண்டு கொண்டு ஜெயில் வெளியீடு பற்றி விசாரித்தார்கள். ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்கு சுடிதார் வாங்க நின்றபோது மானேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்களை சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். வசவு சொற்களைக் கேட்க சகிக்காமல் தெருவை விட்டு வெளியே வந்தேன். கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது,” எனப் பதிவிட்டுள்ளார்.
'அங்காடித் தெரு' படம் வந்து பத்து வருடங்களாகியும் அந்த ஜவுளிக்கடைகளில் பெண்களின் நிலை இன்னம் அப்படியே இருக்கிறதென்பதை என்னவென்று சொல்வது?.




