2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

சாட்டிலைட் டிவி உரிமையை விடவும் அதிக விலைக்கு விற்கப்படுபவை ஓடிடி உரிமைகள். கடந்த சில வருடங்களாக ஓடிடி உரிமை விலையை நம்பியே சில படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சாட்டிலைட் டிவி நிறுவனங்கள் கூட சிறிய படங்களை வாங்கியுள்ளன. அதே சமயம் ஓடிடி நிறுவனங்கள் சிறிய படங்களை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு ஓரிரு வருடங்களாக அதிகம் ஒலிக்கிறது.
பொங்கலை முன்னிட்டு தான் வாங்கியுள்ள சில தமிழ்ப் படங்களைப் பற்றிய அறிவிப்பை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நேற்று வெளியிட்டது. அவற்றில் முன்னணி நடிகர்களின் படங்கள்தான் இருந்தன. எந்த ஒரு சிறிய படமும் இடம் பெறவில்லை.
இது குறித்து 'வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில், அநீதி' ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் காட்டமாக ஒரு பதிவை பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கு, திரையரங்குகளும் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை. படத்தை எடுத்து வைத்து கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது. ஓட ஓட சினிமாவை விட்டு விரட்டுகிறார்கள், முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்பார்ப்பு.
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்குமென்றால் இங்கே ஜனநாயகம் எங்கேயிருக்கிறது.? நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் பேச்சேயில்லை.
பெரு நிறுவனப்படங்களை பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம் மற்றவர்களெல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்பிளிக்ஸ் போன்ற இணையங்களும், தொலைக்காட்சி சேனல்களும்,திரையரங்குகளும். சொந்த நாட்டிலே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை. நான்கு வருடங்களாக படம் இயக்க முடியாத நிலை. இயக்கினாலும் எங்கே விற்பது ? யாரிடம் சென்று கையேந்தி நிற்பது ? யார் வாங்குவார்கள் ? எங்கு திரையரங்கு கிடைக்கும் என்றொரு பரிதாபமான நிலை.
எனக்கு மட்டுமில்லை. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலமை இதுவே. நெட்பிளிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை, சிறிய படங்களை, நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களைப் புறக்கணிக்கிறது. போன ஆண்டு நெட்பிளிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்களே இணையத்தில் தேடிப்பாருங்கள். ஒரு சிறு தயாரிப்பாளராக தேசிய விருது பெற்ற இயக்குநராக நெட்பிளிக்ஸ்க்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.




