மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இயக்குனர் விஜய் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமூகவலைதளத்தில் விஜய்யை புகழ்ந்துள்ளார் கங்கனா.
அதில், ''அன்புள்ள விஜய், தலைவி படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்தது. இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வருகிறது. ஆனால், இதைப் பற்றி நினைக்கும்போது எனக்கு வருத்தமில்லை. உங்கள் இருப்பு இல்லை என நான் வருந்துவதே இந்த உணர்வு என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் தேநீர், காபி, அசைவ உணவு, பார்ட்டிகள் என எதையுமே ஏற்பதில்லை என்பதை நான் உங்களிடமும் முதலில் கவனித்தேன். உங்களை நெருங்குவது சாத்தியமற்றது. ஆனால், நீங்கள் என்றுமே விலகவில்லை என்பதை நான் மெதுவாகப் புரிந்துகொண்டேன்.
நீங்கள் மிகத் திறமையானவர் மட்டுமல்ல, ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததில்லை.
உங்களைப் பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றிப் பேசினேன். உங்களைப் பற்றிப் பேசும்போது அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. நீங்கள் மனிதரே அல்ல, கடவுள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நான் உங்கள் இல்லாமையை உணர்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.