ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தற்போது பொன்னியின் செல்வன் என்கிற பிரமாண்ட சரித்திர படத்தை இயக்கி வரும் மணிரத்னம், அதற்கு இடையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக நவரசா என்ற அந்தாலஜி படம் ஒன்றை தயாரிக்கிறார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை, 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.
இதில் வரும் 9 கதைகளை மணிரத்னம், கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன் ராம், ரதீந்திரன், அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரதீந்திரன் படத்தில் சித்தார்த், பார்வதி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் மும்முரமாக இருப்பதால் இந்த படத்தின் பணிகளில் தொய்வு ஏற்படவே பொன்ராம் விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது கே.வி.ஆனந்தும் விலகி விட்டார் அவருக்கு பதிலாக சாய்வசந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இயக்கத்தில் அருவி படத்தில் அதிதி பாலன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடக்க இருக்கிறது.