பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் வெளியான பிறகு செல்வராகவன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே அந்த கேரக்டருக்கு பெயர் வைத்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆமாம் என்று பதில் கொடுத்திருந்தார் செல்வராகவன்.
அதையடுத்து ஈ.வே.ராமசாமி பெயரைத்தான் செல்வராகவன் வைத்திருக்கிறார் என்று சொல்லி அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தனது டுவிட்டரில், நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. அதை நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும் . மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.