வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் வெளியான பிறகு செல்வராகவன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே அந்த கேரக்டருக்கு பெயர் வைத்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆமாம் என்று பதில் கொடுத்திருந்தார் செல்வராகவன்.
அதையடுத்து ஈ.வே.ராமசாமி பெயரைத்தான் செல்வராகவன் வைத்திருக்கிறார் என்று சொல்லி அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தனது டுவிட்டரில், நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. அதை நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும் . மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.