தந்தையின் 70வது பிறந்தநாளில் 75 பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவங்கிய தீபிகா படுகோனே | 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' படத்தை இலவசமாக யுடியூபில் வெளியிட்ட மோகன்லால் | இலங்கை அகதிகள் பின்னணியில் உருவான மற்றொரு படம் | லாஜிக்கை விட, ரசிகர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம்: என்.டி.பாலகிருஷ்ணா | படம் தோல்வி: பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் | 250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் | பிளாஷ்பேக்: 3 கேமராக்களில் படமான முதல் பாடல் | குப்பைக் கிடங்கில் இருந்த நேரம்: 'குபேரா' அனுபவம் பற்றி தனுஷ் | 24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் |
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் வெளியான பிறகு செல்வராகவன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே அந்த கேரக்டருக்கு பெயர் வைத்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆமாம் என்று பதில் கொடுத்திருந்தார் செல்வராகவன்.
அதையடுத்து ஈ.வே.ராமசாமி பெயரைத்தான் செல்வராகவன் வைத்திருக்கிறார் என்று சொல்லி அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தனது டுவிட்டரில், நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. அதை நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும் . மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.