தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் வெளியான பிறகு செல்வராகவன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே அந்த கேரக்டருக்கு பெயர் வைத்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆமாம் என்று பதில் கொடுத்திருந்தார் செல்வராகவன்.
அதையடுத்து ஈ.வே.ராமசாமி பெயரைத்தான் செல்வராகவன் வைத்திருக்கிறார் என்று சொல்லி அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டு வந்தனர். இதையடுத்து தனது டுவிட்டரில், நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. அதை நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும் . மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.