மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றி மாறன் -தனுஷ் கூட்டணி இணைந்த நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இந்நிலையில் வட சென்னை படம் வெளியான நேரத்தில் வடசென்னை-2 உருவாகும் என்று தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் மூன்று வருடங்களை கடந்து விட்ட நிலையில் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. காரணம் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ''வடசென்னை- 2 இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளது. வட சென்னையை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதன்பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.




