நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றி மாறன் -தனுஷ் கூட்டணி இணைந்த நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இந்நிலையில் வட சென்னை படம் வெளியான நேரத்தில் வடசென்னை-2 உருவாகும் என்று தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் மூன்று வருடங்களை கடந்து விட்ட நிலையில் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. காரணம் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ''வடசென்னை- 2 இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளது. வட சென்னையை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதன்பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.