நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வெற்றி மாறன் -தனுஷ் கூட்டணி இணைந்த நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இந்நிலையில் வட சென்னை படம் வெளியான நேரத்தில் வடசென்னை-2 உருவாகும் என்று தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் மூன்று வருடங்களை கடந்து விட்ட நிலையில் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. காரணம் தனுஷ், வெற்றிமாறன் இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன், ''வடசென்னை- 2 இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளது. வட சென்னையை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இதன்பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.