ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். கும்கி படத்தை அடுத்து இந்த படத்தையும் யானை சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் படமாக்கியிருக்கிறார் பிரபுசாலமன். இப்படம் மார்ச் 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று(மார்ச் 3) காடன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், யானைகள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியை அழித்து அதை நகரமாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவர் இறங்குகிறார். அவரை தடுத்து நிறுத்த கடுமையாக போராடுகிறார் ராணா. இப்படியொரு கதைக்களத்தில் தான் காடன் படம் உருவாகியிருப்பதை அந்த டிரைலரில் புரிந்து கொள்ள முடிகிறது.
அதோடு, ''யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்'' என ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொயித்ரா இசையமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது.