ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், அடுத்த கட்ட பிரசாரத்தை துவக்க உள்ளார். நாளை மாலை, சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருப்ப மனு கொடுத்தவர்களிடம், இன்று முதல், நேர்காணல் நடத்தி வரும் கமல், வரும், 7ம் தேதி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார். இந்நிலையில், காலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து, டுவிட்டர் பக்கத்தில் கமல், போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். என் மீது மட்டுமின்றி, பிறர் மீதும் அக்கறை உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது, உடல் நோய்க்கு தடுப்பூசி; அடுத்த மாதம், ஊழல் நோய்க்கு தடுப்பூசி... தயாராகி விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
கமல் தவிர்த்து ராதிகா, லதா, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட நடிகைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நடிகை வரலட்சுமியின் தாயாரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.