ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மூன்றாம் பாகத்தின் க்ளைமாக்ஸை கூட தான் முடிவு செய்துவிட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-3 குறித்து வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அவர் கூறியுள்ளதாவது ; “சில வருடங்களுக்கு முன் ஒரு எப் எம் ரேடியோ நிகழ்ச்சியில் பேசும்போது, என்னிடம் கதை சொல்பவர்களுக்காக நான் ஒரு ஈமெயில் ஐடி பயன்படுத்துகிறேன் என கூறியிருந்தேன். தற்போது பலரும் த்ரிஷ்யம்-3க்கான கதை என கூறிக்கொண்டு அந்த மெயில் ஐடியில் கதைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் எனது மெயில் நிரம்பி வழிகிறது. மேலும் த்ரிஷ்யம்-3க்கான கதையை நானே தான் உருவாக்க போகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் இப்படி கதைகள் அனுப்ப வேண்டாம். காரணம் அவற்றை நான் படிக்க போவதில்லை. மெயிலில் இருந்து அழிக்கத்தான் போகிறேன்” என ஜீத்து கூறியுள்ளார்.