'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மூன்றாம் பாகத்தின் க்ளைமாக்ஸை கூட தான் முடிவு செய்துவிட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-3 குறித்து வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அவர் கூறியுள்ளதாவது ; “சில வருடங்களுக்கு முன் ஒரு எப் எம் ரேடியோ நிகழ்ச்சியில் பேசும்போது, என்னிடம் கதை சொல்பவர்களுக்காக நான் ஒரு ஈமெயில் ஐடி பயன்படுத்துகிறேன் என கூறியிருந்தேன். தற்போது பலரும் த்ரிஷ்யம்-3க்கான கதை என கூறிக்கொண்டு அந்த மெயில் ஐடியில் கதைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் எனது மெயில் நிரம்பி வழிகிறது. மேலும் த்ரிஷ்யம்-3க்கான கதையை நானே தான் உருவாக்க போகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் இப்படி கதைகள் அனுப்ப வேண்டாம். காரணம் அவற்றை நான் படிக்க போவதில்லை. மெயிலில் இருந்து அழிக்கத்தான் போகிறேன்” என ஜீத்து கூறியுள்ளார்.