பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சமீபத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம்-2 படம் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மூன்றாம் பாகத்தின் க்ளைமாக்ஸை கூட தான் முடிவு செய்துவிட்டதாக கூறியிருந்தார். இந்தநிலையில் த்ரிஷ்யம்-3 குறித்து வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
அவர் கூறியுள்ளதாவது ; “சில வருடங்களுக்கு முன் ஒரு எப் எம் ரேடியோ நிகழ்ச்சியில் பேசும்போது, என்னிடம் கதை சொல்பவர்களுக்காக நான் ஒரு ஈமெயில் ஐடி பயன்படுத்துகிறேன் என கூறியிருந்தேன். தற்போது பலரும் த்ரிஷ்யம்-3க்கான கதை என கூறிக்கொண்டு அந்த மெயில் ஐடியில் கதைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் எனது மெயில் நிரம்பி வழிகிறது. மேலும் த்ரிஷ்யம்-3க்கான கதையை நானே தான் உருவாக்க போகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் இப்படி கதைகள் அனுப்ப வேண்டாம். காரணம் அவற்றை நான் படிக்க போவதில்லை. மெயிலில் இருந்து அழிக்கத்தான் போகிறேன்” என ஜீத்து கூறியுள்ளார்.