ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடத்தில் 2016ல் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அடுத்து அவரை தங்களது படங்களிலும் நாயகியாக நடிக்க வைக்க சில முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ராஷ்மிகாவின் டார்க்கெட்டோ பாலிவுட்டை நோக்கி இருக்கிறது.
தற்போது ஹிந்தியில் 'மிஷன் மஜ்னு' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்து அமிதாப்பச்சன் நடிக்கும் 'டெட்லி' படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா நடித்த ஹிந்தி ஆல்பமான 'டாப் டக்கர்' வீடியோ 5 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. இதனால் ராஷ்மிகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சித்து வருகிறாராம். இதனால், தற்போது மும்பையில் சொந்தமாக விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம். ஹைதராபாத்திலும் இது போலவே ஒரு பிளாட்டை ஏற்கெனவே வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
அதனால், இனி தமிழ்ப் படங்களில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.