ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தெலுங்கில் மீண்டும் பிசியான ஹீரோயினாகிவிட்டார். ரவிதேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியாகி வெற்றிபெற்றதை அடுத்து, பவன் கல்யாணுடன் நடித்துள்ள வக்கீல் சாப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையே ஓடிடி தளத்திற்காக அவர் நடித்துள்ள பிட்டா கதலு என்ற படம் பிப்ரவரி19ம் தேதியான நாளை வெளியாகிறது. அடுத்து பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ரவிதேஜாவிற்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு. அவர் என்னிடத்தில் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். அதேபோல், மகேஷ்பாபு ஒரு அழகான ஹீரோ. அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான நேரங்கள். அல்லு அர்ஜூன் நான் இதுவரை கண்டிராத கடின உழைப்பாளி. நேர்மையானவர். தனது ஒவ்வொரு படங்களுக்கும் தான் செய்ய வேண்டியதை விட அவர் அதிகமான உழைப்பை கொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.