நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தெலுங்கில் மீண்டும் பிசியான ஹீரோயினாகிவிட்டார். ரவிதேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியாகி வெற்றிபெற்றதை அடுத்து, பவன் கல்யாணுடன் நடித்துள்ள வக்கீல் சாப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையே ஓடிடி தளத்திற்காக அவர் நடித்துள்ள பிட்டா கதலு என்ற படம் பிப்ரவரி19ம் தேதியான நாளை வெளியாகிறது. அடுத்து பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ரவிதேஜாவிற்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு. அவர் என்னிடத்தில் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். அதேபோல், மகேஷ்பாபு ஒரு அழகான ஹீரோ. அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான நேரங்கள். அல்லு அர்ஜூன் நான் இதுவரை கண்டிராத கடின உழைப்பாளி. நேர்மையானவர். தனது ஒவ்வொரு படங்களுக்கும் தான் செய்ய வேண்டியதை விட அவர் அதிகமான உழைப்பை கொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.