தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் |

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரைக்கு வந்து குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.
இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் 143 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். அதோடு அங்கு கூடிய பொதுமக்களிடமும் மரக்கன்றுகளை நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
அதையடுத்து மீடியாக்களிடம் காதலர் தின குறித்து ரம்யா பாண்டியன் கூறுகையில், நாம் ரசிக்க வேண்டிய விசயங்களுக்கு நம்முடைய பங்களிப்பை கொடுக்க வேண்டும். முக்கியமாக மரங்களை வீட்டில் பால்கனி, மாடி அல்லது இப்படி மரம் நட்டு வளர்த்து சமூகத்திற்கு இயற்கைக்கும் பயன்படும் வகையில் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த காதலர் தினத்தன்று இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் அன்பை காட்டுங்கள். நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் காதலுக்கு அன்பை காட்டுங்கள். என்னைப்போன்று சிங்கிளாக இருந்தால் இயற்கையோடு அதிகமான அன்பை காட்டுங்கள் என்றும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.




