நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

களவாணி படத்தில் நாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. ஆனபோதும் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய ஓவியா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். அதன்பிறகு களவாணி-2 உள்ளிட்ட சில படங்ளில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்ததையொட்டி சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரன்டிங் ஆனது. அதை யடுத்து ஓவியாவும் தனது டுவிட்டரில் கோ பேக் மோடி என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் நடிகை ஓவியாவிற்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இனிமேல் ஓவியா எப்போது சென்னை வந்தாலும் அவருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.