என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
களவாணி படத்தில் நாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. ஆனபோதும் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய ஓவியா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். அதன்பிறகு களவாணி-2 உள்ளிட்ட சில படங்ளில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்ததையொட்டி சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரன்டிங் ஆனது. அதை யடுத்து ஓவியாவும் தனது டுவிட்டரில் கோ பேக் மோடி என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் நடிகை ஓவியாவிற்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இனிமேல் ஓவியா எப்போது சென்னை வந்தாலும் அவருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.