இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

ஜெயம்ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழில் நிதி அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். குறிப்பாக, முன்பு குஷ்புவிற்கு கோயில் கட்டி பூஜை நடத்தியது போன்று இப்போது சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு சிலை வடித்து அதற்கு பாலாபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ள நிதி அகர்வால், இதை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாக நினைப்பதாகவும், தமிழக ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
           
             
           
             
           
             
           
            