போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்த 'அஞ்சான்' படத்தை எடுத்த இயக்குனர் லிங்குசாமி அந்தப் படத்திற்காக மிகவும் கிண்டலடிக்கப்பட்டார். படமும் படுதோல்வியைத் தழுவியது.
அதன்பின் எப்படியோ சமாளித்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கினார். ஆனால், அப்படமும் தோல்வியைத் தழுவியது.
கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கும் லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ள படத்தைத்தான் லிங்குசாமி இயக்கப் போகிறாராம். கதையைக் கேட்ட ராம் நடிக்க சம்மதித்துவிட்டதாகவும் தகவல்.
தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களைத் தயாரித்து அதில் நஷ்டமடைந்த காரணத்தால் லிங்குசாமியின் திரையுலக வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை வைத்து தயாரித்த 'உத்தம வில்லன்' படம் பெரும் தோல்வியடைந்தது.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்து அவர்கள் தயாரித்து முடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படமும் இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது.