திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்த 'அஞ்சான்' படத்தை எடுத்த இயக்குனர் லிங்குசாமி அந்தப் படத்திற்காக மிகவும் கிண்டலடிக்கப்பட்டார். படமும் படுதோல்வியைத் தழுவியது.
அதன்பின் எப்படியோ சமாளித்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கினார். ஆனால், அப்படமும் தோல்வியைத் தழுவியது.
கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கும் லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ள படத்தைத்தான் லிங்குசாமி இயக்கப் போகிறாராம். கதையைக் கேட்ட ராம் நடிக்க சம்மதித்துவிட்டதாகவும் தகவல்.
தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களைத் தயாரித்து அதில் நஷ்டமடைந்த காரணத்தால் லிங்குசாமியின் திரையுலக வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை வைத்து தயாரித்த 'உத்தம வில்லன்' படம் பெரும் தோல்வியடைந்தது.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்து அவர்கள் தயாரித்து முடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படமும் இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது.