நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார்.
தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாளத்தில் இருந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஏன் பெறுவதில்லை என்பது பற்றி பேசியிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
அதில், “ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படத்தை மலையாளத்திலும், தமிழ் படத்தை தமிழிலும், தெலுங்குப் படத்தை தெலுங்கிலும் தான் பார்க்க வேண்டும்.
வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை". என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
மஞ்சிமா மோகன் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற குயின் ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.