ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழ் நடிகரான கவுதம் கார்த்திக் உடன் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தார். அந்த படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்து அப்போது பல வதந்திகள் வந்தன. அதற்கு விளக்கம் அளித்து தற்போது மஞ்சிமா மோகன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய திருமணம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்றும் பல பொய்யான தகவல்கள் பரவின. இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தனர்.
என்னை உடல்கேலி செய்து காயப்படுத்தும் கருத்துகள் வெளிவந்தபோது நான் வருந்தவில்லை. அது அவர்களின் பார்வைகோளாறு என்றே கருதி வந்தேன். ஆனால் திருமணத்துக்குப் பின் இது குறித்து கவலைப்பட்டிருக்கிறேன். நான் கவுதமுக்கு ஏற்ற ஜோடியில்லை என்ற கருத்துகளை கேட்கும்போது மனது வலிக்கும். அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன்.
தம்பதியினர் தங்கள் சமூகவலைதளங்களில் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் பயத்தால் அதை செய்வதில்லை. எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் சக்தியை கவுதமின் காதலும் அன்பும் எனக்கு தந்திருக்கிறது.
இவ்வாறு மஞ்சிமா கூறியுள்ளார்.