'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழ் நடிகரான கவுதம் கார்த்திக் உடன் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தார். அந்த படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்து அப்போது பல வதந்திகள் வந்தன. அதற்கு விளக்கம் அளித்து தற்போது மஞ்சிமா மோகன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய திருமணம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்றும் பல பொய்யான தகவல்கள் பரவின. இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தனர்.
என்னை உடல்கேலி செய்து காயப்படுத்தும் கருத்துகள் வெளிவந்தபோது நான் வருந்தவில்லை. அது அவர்களின் பார்வைகோளாறு என்றே கருதி வந்தேன். ஆனால் திருமணத்துக்குப் பின் இது குறித்து கவலைப்பட்டிருக்கிறேன். நான் கவுதமுக்கு ஏற்ற ஜோடியில்லை என்ற கருத்துகளை கேட்கும்போது மனது வலிக்கும். அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன்.
தம்பதியினர் தங்கள் சமூகவலைதளங்களில் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் பயத்தால் அதை செய்வதில்லை. எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் சக்தியை கவுதமின் காதலும் அன்பும் எனக்கு தந்திருக்கிறது.
இவ்வாறு மஞ்சிமா கூறியுள்ளார்.