10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தன. தனுஷுடன் இணைந்து நடித்த பட்டாஸ் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் மெஹ்ரீன்.
கடந்த 2019ல் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் உடன் மெஹ்ரீன் இணைந்து நடித்த எப்-2 படம் நன்றாக ஓடியதால், தற்போது அதன் அடுத்த பாகமாக உருவாகி வரும் எப்-3 படத்திலும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து, அதில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இந்த எப்-3 படம் தெலுங்கில் தனது பயணத்தை சீராக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் மெஹ்ரீன்.