சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தன. தனுஷுடன் இணைந்து நடித்த பட்டாஸ் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் மெஹ்ரீன்.
கடந்த 2019ல் தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் உடன் மெஹ்ரீன் இணைந்து நடித்த எப்-2 படம் நன்றாக ஓடியதால், தற்போது அதன் அடுத்த பாகமாக உருவாகி வரும் எப்-3 படத்திலும் அவருக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து, அதில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இந்த எப்-3 படம் தெலுங்கில் தனது பயணத்தை சீராக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் மெஹ்ரீன்.