பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் அங்கு இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதை சமீபத்தில் நடைபெற்ற உப்பென்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக பார்க்க முடிந்தது. உப்பென்னா படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
ஆனால் சமீபத்தில் வெளியான டிரைலரில் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் அவருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை என்கிற விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்தது. இந்தநிலையில் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் புஜ்ஜிபாபு.
“இந்தப்படத்தில் நடிக்கும்போதே இந்த கதாபாத்திரத்திற்கு தனது குரல் செட்டாகாது என கூறிவிட்டார் விஜய்சேதுபதி. அதனை தொடர்ந்து பல டப்பிங் கலைஞர்களை பேசவைத்து பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. இறுதியாக ரவிசங்கரை வைத்து டப்பிங் பேசவைத்தோம். எந்த படத்திற்கும் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிடும் ரவிசங்கர், இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பொருந்த வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசி கொடுத்தார்” என கூறியுள்ளார் இயக்குனர் புஜ்ஜிபாபு