சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் அங்கு இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதை சமீபத்தில் நடைபெற்ற உப்பென்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக பார்க்க முடிந்தது. உப்பென்னா படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
ஆனால் சமீபத்தில் வெளியான டிரைலரில் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் அவருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை என்கிற விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்தது. இந்தநிலையில் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் புஜ்ஜிபாபு.
“இந்தப்படத்தில் நடிக்கும்போதே இந்த கதாபாத்திரத்திற்கு தனது குரல் செட்டாகாது என கூறிவிட்டார் விஜய்சேதுபதி. அதனை தொடர்ந்து பல டப்பிங் கலைஞர்களை பேசவைத்து பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. இறுதியாக ரவிசங்கரை வைத்து டப்பிங் பேசவைத்தோம். எந்த படத்திற்கும் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிடும் ரவிசங்கர், இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பொருந்த வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசி கொடுத்தார்” என கூறியுள்ளார் இயக்குனர் புஜ்ஜிபாபு