புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் அங்கு இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதை சமீபத்தில் நடைபெற்ற உப்பென்னா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கூடாக பார்க்க முடிந்தது. உப்பென்னா படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
ஆனால் சமீபத்தில் வெளியான டிரைலரில் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் அவருக்கு அவ்வளவாக பொருந்தவில்லை என்கிற விமர்சனம் ரசிகர்களிடம் எழுந்தது. இந்தநிலையில் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் புஜ்ஜிபாபு.
“இந்தப்படத்தில் நடிக்கும்போதே இந்த கதாபாத்திரத்திற்கு தனது குரல் செட்டாகாது என கூறிவிட்டார் விஜய்சேதுபதி. அதனை தொடர்ந்து பல டப்பிங் கலைஞர்களை பேசவைத்து பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை. இறுதியாக ரவிசங்கரை வைத்து டப்பிங் பேசவைத்தோம். எந்த படத்திற்கும் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிடும் ரவிசங்கர், இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பொருந்த வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் டைம் எடுத்துக்கொண்டு டப்பிங் பேசி கொடுத்தார்” என கூறியுள்ளார் இயக்குனர் புஜ்ஜிபாபு