ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பரியேறும் பெருமாள் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, என் ஆளோட செருப்ப காணோம், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விவாரணை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் அலாவுதீனும் அற்புத கேமராவும், டைட்டானிக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சாக்ரடீஸ் என்ற உதவி டைரக்டரை ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார். சாக்ரடீஸ், மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீனின் மைத்துணர். அவரிடம் உதவி டைரக்டராக பணியாற்றி வருகிறார். ஆனந்தி தான் நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது திருமணம் செய்து கொண்டது பற்றி கூறியதாவது:
சாக்ரடீஸ் குடும்பமும், எங்கள் குடும்பமும் கடந்த பல வருடங்களாக நெருக்கமான குடும்பம். நாங்கள் நட்பாக பழகினோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. எங்கள் குடும்பத்தினர்தான் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். உரிய வயதில் திருமணம் செய்து கொள்வது எனது தனிப்பட்ட விஷயம். அதனால்தான் அதனை உறவினர்களை வைத்து முடித்துக் கொண்டோம்
திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளேன். பொதுவாக திருமணத்திற்கு பிறகு அதிக வாய்ப்புகள் வராது என்பார்கள். எனக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது. என்கிறார் ஆனந்தி.