தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் |

5 வயதிலிருந்து தான் ஆஸ்துமா நோயுடன் போராடுவதாகவும், கையில் எப்போதும் இன்ஹேலர் வைத்துக் கொண்டு அதனுடன் தான் வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 5 வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சினை சரியாகவில்லை. குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டேன்.
இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். நான் இன்ஹேலர் உபயோகப்படுத்தும்போது என்னை ஒருவிதமாக பார்ப்பார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும். என்கிறார் காஜல் அகர்வால்.