சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகை நதியா திரையுலகில் நுழைந்து 37 வருடங்கள் ஆகின்றன. இவரை மலையாளத்தில், “நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து' என்கிற படம் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாசில். அந்தப்படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என ரீமேக் செய்தபோதும் நதியாவே நடித்தார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நதியாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. நேற்று தனது குருவான பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நதியா.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில், பூவே பூச்சூடவா படத்தில் பணிபுரிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நதியா இதுகுறித்து கூறும்போது, “இயக்குனர் பாசில் என்னைப் பொறுத்தவரை எப்போதுமே பாசில் அங்கிள் தான்.. மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகத்திற்குள் நுழையும் விதமாக என் கண்களை திறந்து விட்டவர். 17 வயதில் சாதாரண ஜரீனாவாக இருந்த என்னை நதியாவாக மாற்றினார்.. அவரது இயக்கமும் வழிகாட்டுதலும் தான் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாபாத்திரங்களை எனக்கு கிடைக்க செய்தது” என நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.