'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அசோக் செல்வன் பிசியான நடிகர் ஆகிவிட்டார். மலையாளத்தில் உருவாகி வரும் சரித்திரபடமான மரைக்காயரில் நடித்துள்ளார். இதுதவிர 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் தீனி. இதனை அனி ஐ.வி.சசி இயக்குகிறார். அசோக் செல்வனுடன் நித்யாமேனன், ரிது வர்மா நடிக்கிறார்கள். ஸ்ரீ வெங்டேஸ்வரா சினி சித்ரா, ஜீ ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார், ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குன் அனி ஐ.வி.சசி கூறியதாவது: இது உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த பொழுதுபோக்கு படம் . அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. என்றார்.