‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
கமலுடன் இந்தியன் -2 படத்தில் நடித்து வரும் சித்தார்த், தனது சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருபவர். குறிப்பாக அரசியல் சார்ந்த விசயங்களுக்கு தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வரும் இவர் மத்திய-, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வரும் இவர், நாதுராம் கோட்சேவை கொலையாளி, தீவிரவாதி என்றும் விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது, தனது டுவிட்டர் கணக்கு ஐந்து முறை ஹேக் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார் சித்தார்த். அதோடு பதிவு செய்யும் கருத்துக்கள் தன்னை பாலோ செய்பவர்களுக்கு தெரிவதில்லை. கடந்த 16 மாதங்களாக எனது டுவிட்டர் கணக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. மேலும், தன்னை ஏற்கனவே பாலோ செய்து வந்தவர்கள் அன்பாலோ செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தனது இந்த குற்றச்சாட்டை டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் டேக் செய்திருக்கிறார் சித்தார்த்.