சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கமலுடன் இந்தியன் -2 படத்தில் நடித்து வரும் சித்தார்த், தனது சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருபவர். குறிப்பாக அரசியல் சார்ந்த விசயங்களுக்கு தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வரும் இவர் மத்திய-, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வரும் இவர், நாதுராம் கோட்சேவை கொலையாளி, தீவிரவாதி என்றும் விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது, தனது டுவிட்டர் கணக்கு ஐந்து முறை ஹேக் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார் சித்தார்த். அதோடு பதிவு செய்யும் கருத்துக்கள் தன்னை பாலோ செய்பவர்களுக்கு தெரிவதில்லை. கடந்த 16 மாதங்களாக எனது டுவிட்டர் கணக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. மேலும், தன்னை ஏற்கனவே பாலோ செய்து வந்தவர்கள் அன்பாலோ செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தனது இந்த குற்றச்சாட்டை டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் டேக் செய்திருக்கிறார் சித்தார்த்.