புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
கமலுடன் இந்தியன் -2 படத்தில் நடித்து வரும் சித்தார்த், தனது சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருபவர். குறிப்பாக அரசியல் சார்ந்த விசயங்களுக்கு தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வரும் இவர் மத்திய-, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வரும் இவர், நாதுராம் கோட்சேவை கொலையாளி, தீவிரவாதி என்றும் விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது, தனது டுவிட்டர் கணக்கு ஐந்து முறை ஹேக் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார் சித்தார்த். அதோடு பதிவு செய்யும் கருத்துக்கள் தன்னை பாலோ செய்பவர்களுக்கு தெரிவதில்லை. கடந்த 16 மாதங்களாக எனது டுவிட்டர் கணக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. மேலும், தன்னை ஏற்கனவே பாலோ செய்து வந்தவர்கள் அன்பாலோ செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தனது இந்த குற்றச்சாட்டை டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் டேக் செய்திருக்கிறார் சித்தார்த்.