ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமலுடன் இந்தியன் -2 படத்தில் நடித்து வரும் சித்தார்த், தனது சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருபவர். குறிப்பாக அரசியல் சார்ந்த விசயங்களுக்கு தனது கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வரும் இவர் மத்திய-, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வரும் இவர், நாதுராம் கோட்சேவை கொலையாளி, தீவிரவாதி என்றும் விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது, தனது டுவிட்டர் கணக்கு ஐந்து முறை ஹேக் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார் சித்தார்த். அதோடு பதிவு செய்யும் கருத்துக்கள் தன்னை பாலோ செய்பவர்களுக்கு தெரிவதில்லை. கடந்த 16 மாதங்களாக எனது டுவிட்டர் கணக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. மேலும், தன்னை ஏற்கனவே பாலோ செய்து வந்தவர்கள் அன்பாலோ செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தனது இந்த குற்றச்சாட்டை டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் டேக் செய்திருக்கிறார் சித்தார்த்.