‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தியேட்டருக்கு 100 சதவிகித ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மாஸ்டர் ஓடிடியில் வெளியானது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தியேட்டருக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடிகிறது. என்றாலும் தொடர்ந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மாஸ்டர் படத்தின் லைசென்ஸ் பிப்ரவரி 4ம் தேதி ( நாளை) இரவு வரை தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகையால் 4ம் தேதி இரவு வரை அனைத்துத் திரையரங்குகளுக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமை முதல் யாரெல்லாம் படத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறீர்களோ அவர்கள் எல்லாம் அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
கபடதாரி திரைப்படம் 30 நாள் கழித்துத்தான் ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகும் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் விரைவில் பேச்சுவாத்தை நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.