நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. 50 சதவீத இருக்கைகள் என்றாலும் படத்திற்கு எதிர்பார்த்ததை விட வசூல் அதிகமாகவே கிடைத்தது.
தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கடந்த வாரம் 29ம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியானது. ஆனால், அதன்பின்னும் தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றுடன் முடிவடைந்த மூன்றாவது வார இறுதி நிலவரப்படி இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 180 கோடியும், வெளிநாடுகளில் 42 கோடியும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. ஹிந்தியில் வெளியான வட இந்தியாவில் மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தியேட்டர் வெளியீடுகள் மூலம் மட்டும் சுமார் 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படத்தின் சாட்டிலைட் உரிமம் மூலம் 30 கோடி, ஓடிடி தளங்கள், இணையதளங்கள் 50 கோடி, இசை மற்றும் இதர உரிமைகள் 5 கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
மொத்த வருமானம் 332 கோடி ரூபாயில் படத்தின் பட்ஜெட் 150 கோடி போக தியேட்டர் வருமானம், மேலே குறிப்பிட்ட மற்ற வருவாய் என 100 கோடி முதல் 120 கோடி வரை கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதுதான் வினியோக வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்.
இந்த ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெற்றியாக 'மாஸ்டர்' அமைந்தது அடுத்து வர உள்ள படங்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்துள்ளது.