தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தற்போது தலைவராக உள்ள இசை அமைப்பாளர் தினா தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர்.
தலைவராக தினாவும், ஜோனா பக்தகுமார் பொதுச் செயலாளராகவும், மகேஷ் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர். தேர்தல் அதிகாரிகளாக இயக்குனர்கள் டி.கே.சண்முகசுந்தரமும், ரமேஷ் பிரபாகரனும் பணியாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை (2ம் தேதி) சங்க கலையரங்கில் நடக்கிறது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.