இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் இந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான 16 நாட்களில் நேற்று ஓடிடி தளத்திலும் வெளியானது.
இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் தியேட்டர்களுக்கு இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு சீக்கிரமாக படத்தை ஓடிடி தளத்திற்குக் கொடுத்ததற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள்.
படத்திற்காகப் பேசப்பட்ட பங்கு சதவீதத்தை தங்களுக்கு முதல் வாரத்திலிருந்தே உயர்த்தித் தர வேண்டும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
எனவே, இன்றும், நாளையும் தியேட்டர்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் வருவார்கள் என்பதாலும், மூன்று வாரத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதாலும் பிப்ரவரி 2ம் தேதியுடன் தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிடுவதை தியேட்டர்காரர்கள் நிறுத்தப் போகிறார்களாம்.
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விஜய் படம் மூன்றே வாரங்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்படுவது இதுவே முதல் முறை. இதனால், விஜய் சற்று அதிருப்தியில் இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.