காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

இந்திய அளவில் பிரம்மாண்ட நாயகனாக உருவெடுத்துள்ள பிரபாஸ், இப்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் ஒரு படம் என நான்கு படங்களில் நடிக்கிறார். இவற்றில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்து சலார் படம் துவங்க உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் இப்படத்திற்கான பூஜை நடந்தது. இதை கே.ஜி.எப். புகழ் பிரசாந்த நீல் இயக்குகிறார்.
இப்படத்தில் நாயகியாக ஹிந்தி நடிகை ஒருவர் நடிப்பார் என கூறப்பட்டது. பின்னர் ஸ்ருதிஹாசன் அந்த வேடத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தோம். இப்போது அது உண்மையாகிவிட்டது. சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இதன்மூலம் முதன்முறையாக பிரபாஸ் படத்தில் இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஸ்ருதி பிரபலம் என்பதால் இவரை நாயகியாக தேர்வு செய்துள்ளனர்.




