பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை தமிழில் 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் உதவியாளர்களாக இருந்த சபரி - சரவணன் இயக்க, பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகிபாபு என பலர் நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று(ஜன., 28) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவீர்களா? என்று கே.எஸ். ரவிக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, ரஜினியுடன் நான் தொடர்பில் இருந்து தான் வருகிறேன். மாதம் ஒருமுறையாவது போன் செய்து நலம் விசாரிப்பேன். அந்த வகையில், சமீபத்தில பேசியபோது ராணா படத்தின் கதையை மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது கதை நன்றாக தான் உள்ளது. ஆனால் இப்போது உடல்நிலை இருக்கிற நிலையில் அந்த பண்ண முடியாது. உடல் சீரானதும் ராணா கதையை பண்ணுவோம் என்று கூறினார் என்றார்.
அதையடுத்து, நீங்கள் இயக்கி சூப்பர் ஹிட்டான படையப்பா, தெனாலி, வரலாறு போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, நல்ல படமாக இயக்கினாலும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுத்தான் பேசுவார்கள். அதனால் எனக்கு இரண்டாம் பாகம் இயக்குவதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
கடந்த 2012ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடிக்கயிருந்தார் ரஜினி. ஆனால் அந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோதே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதையடுத்து சிங்கப்பூருக்கு சென்று உடல் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதனால் அந்தப்படம் அப்போது டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.