'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை தமிழில் 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் உதவியாளர்களாக இருந்த சபரி - சரவணன் இயக்க, பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகிபாபு என பலர் நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று(ஜன., 28) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவீர்களா? என்று கே.எஸ். ரவிக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, ரஜினியுடன் நான் தொடர்பில் இருந்து தான் வருகிறேன். மாதம் ஒருமுறையாவது போன் செய்து நலம் விசாரிப்பேன். அந்த வகையில், சமீபத்தில பேசியபோது ராணா படத்தின் கதையை மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது கதை நன்றாக தான் உள்ளது. ஆனால் இப்போது உடல்நிலை இருக்கிற நிலையில் அந்த பண்ண முடியாது. உடல் சீரானதும் ராணா கதையை பண்ணுவோம் என்று கூறினார் என்றார்.
அதையடுத்து, நீங்கள் இயக்கி சூப்பர் ஹிட்டான படையப்பா, தெனாலி, வரலாறு போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, நல்ல படமாக இயக்கினாலும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுத்தான் பேசுவார்கள். அதனால் எனக்கு இரண்டாம் பாகம் இயக்குவதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
கடந்த 2012ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடிக்கயிருந்தார் ரஜினி. ஆனால் அந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோதே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதையடுத்து சிங்கப்பூருக்கு சென்று உடல் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதனால் அந்தப்படம் அப்போது டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.