ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். இந்த படத்தில் இவர்கள் இணைந்து நடித்தாலும் காதலர்கள் இல்லை. போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்தார்கள். அந்த படத்தில் காதல், டூயட் இல்லாத குறையை இப்போது தீர்க்க இருக்கிறார்கள்.
அருண் விஜய் முதன் முறையாக தனது மச்சான் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இது ஹரியின் வழக்கமான வில்லேஜ் ஆக்ஷன் படம். அருவா, டாட்டா சுமோ, வெள்ளைவேட்டி வில்லன் என பழைய பேக்கேஜோடு மீண்டும் வருகிறார். இந்த கதை சூர்யாவுக்கு சொன்ன கதை என்றும் அவர் நடிக்க மறுத்ததால் அருண் விஜய்யை நடிக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புகள் நடக்கிறது.