ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனாவால் கடந்தாண்டு வெளியாக வேண்டிய பல படங்கள் இந்தாண்டு வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் ரிலீஸில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் சுதந்திர போராட்ட கதையில் உருவாகி வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சில தினங்களுக்கு இப்படம் அக்., 13ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் அவரது தயாரிப்பில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ள 'மைதான்' படம் அக்., 15ல் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி போனி கபூர், ''கொரோனா காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். ஆனால் திரையுலகில் அப்படி இல்லை. இரண்டு பெரிய படங்கள் ஓரிரு நாள் இடைவெளியில் வருவது விரும்பத்தகாத நிகழ்வு. இரண்டு படத்திற்கும் தேவையில்லாத குழப்பங்களும் வரும், தியேட்டர் உள்ளிட்ட பிரச்னைகளும் வரும். இதனால் வினியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். ராஜமவுலியிடம் பேசியபோது, தயாரிப்பாளர் தான் ரிலீஸ் தேதி முடிவு செய்கிறார், என்றார்' என குறிப்பிட்டுள்ளார்.