விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
கொரோனாவால் கடந்தாண்டு வெளியாக வேண்டிய பல படங்கள் இந்தாண்டு வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் ரிலீஸில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் சுதந்திர போராட்ட கதையில் உருவாகி வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சில தினங்களுக்கு இப்படம் அக்., 13ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் அவரது தயாரிப்பில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ள 'மைதான்' படம் அக்., 15ல் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி போனி கபூர், ''கொரோனா காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். ஆனால் திரையுலகில் அப்படி இல்லை. இரண்டு பெரிய படங்கள் ஓரிரு நாள் இடைவெளியில் வருவது விரும்பத்தகாத நிகழ்வு. இரண்டு படத்திற்கும் தேவையில்லாத குழப்பங்களும் வரும், தியேட்டர் உள்ளிட்ட பிரச்னைகளும் வரும். இதனால் வினியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். ராஜமவுலியிடம் பேசியபோது, தயாரிப்பாளர் தான் ரிலீஸ் தேதி முடிவு செய்கிறார், என்றார்' என குறிப்பிட்டுள்ளார்.