நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் பணத்தை இழப்பதும் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த ஆன்லைன் ரம்மியை விளம்பரப்படுத்துகின்றனர். சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர், சூதாட்ட விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்று மனு செய்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தி வரும் நடிகர்கள் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்ச ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள நீதிமன்றத்தில், ஒருவர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தமன்னா, பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.