ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் பணத்தை இழப்பதும் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த ஆன்லைன் ரம்மியை விளம்பரப்படுத்துகின்றனர். சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர், சூதாட்ட விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்று மனு செய்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தி வரும் நடிகர்கள் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்ச ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள நீதிமன்றத்தில், ஒருவர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தமன்னா, பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.