கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் பணத்தை இழப்பதும் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த ஆன்லைன் ரம்மியை விளம்பரப்படுத்துகின்றனர். சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர், சூதாட்ட விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்று மனு செய்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தி வரும் நடிகர்கள் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்ச ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள நீதிமன்றத்தில், ஒருவர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தமன்னா, பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.