மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் அஜ்மல், தற்போது தமிழில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் இவரது தம்பி அஸ்கர் அமீர் இயக்குனராக அறிமுகமாகும் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஜ்மல்.
“என்னுடைய தம்பி தான் என்றாலும், எப்படி டைரக்ட் பண்ணுவானோ என்கிற டென்சனுடன் தான் படப்பிடிப்புக்கு சென்றேன்.. ஆனால் ஒரு டைரக்டராக தன்னை அழகாக பொருத்திக் கொண்டு விட்டான். ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக, அதேசமயம் காட்சிக்கு என்ன தேவை என்பதை மட்டும் படமாக்கியதை கண்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன்.” என தம்பியின் டைரக்சன் பற்றி பெருமைப்படுகிறார் நடிகர் அஜ்மல்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு, குட்டிக்கணம், முண்டக்காயம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹாரர் கதை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார் அஜ்மல்.. மலைப்பகுதி ஒன்றுக்கு போட்டோகிராபர் ஒருவருடன் செல்லும் அஜ்மல், அங்கே சந்திக்கும் திகிலான அனுபவங்களும் அதன் பின்னணியில் அடங்கியுள்ள மர்மங்களும் தான் படத்தின் கதையாம்.




