கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' |
'அஞ்சாதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஜ்மல் அமீர். தொடர்ந்து வெற்றிச்செல்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள், நுங்கம்பாக்கம், நெற்றிக்கண் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் உடன் 'கோட்' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மீது 'சினம்' ,'உயிர் வரை இனித்தாய்' போன்ற படங்களில் நடித்துள்ள நர்வினி டெரி ரவிசங்கர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : எனது நண்பருடன் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் என்னிடம் வந்து, 'நான் எனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா?' என்று கேட்டார். மறுநாள் நான் ஆடிஷனுக்கு அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
அவருடன் நடனம் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான், முடியாது என்று சொன்னேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ ஒருவர் காலிங்பெல்லை அழுத்தினார். அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்க கூடாது. அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது.
சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர். அதனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.