படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
திருமணத்திற்கு பிறகும் வழக்கம்போல் படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேசமயம் நயன்தாரா, சமந்தாவை ஆர்வமுடன் படங்களுக்கு புக் பண்ணும் தயாரிப்பாளர்கள் தன்னை புக் பண்ணுவதில்லை என்கிற ஒரு ஆதங்கம் அவரிடம் இருந்து வருகிறது.
இருப்பினும் தான் நடித்து வரும் இந்தியன்-2, ஆச்சார்யா ஆகிய படங்கள் திரைக்கு வரும்போது நானும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகையாகி விடுவேன் என்று நம்பும் காஜல், தான் நடித்து வந்த மொசகலு என்ற தெலுங்கு படம் திரைக்கு வர தயாராகி விட்டதால் கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறார்.
ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜெப்ரிசின் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, ருஹானி சர்மா, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதோடு மார்ச் 11-ல் இப்படம் திரைக்கு வருகிறது. ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மொசகலு, தனது சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் காஜல்.