புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
திருமணத்திற்கு பிறகும் வழக்கம்போல் படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேசமயம் நயன்தாரா, சமந்தாவை ஆர்வமுடன் படங்களுக்கு புக் பண்ணும் தயாரிப்பாளர்கள் தன்னை புக் பண்ணுவதில்லை என்கிற ஒரு ஆதங்கம் அவரிடம் இருந்து வருகிறது.
இருப்பினும் தான் நடித்து வரும் இந்தியன்-2, ஆச்சார்யா ஆகிய படங்கள் திரைக்கு வரும்போது நானும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகையாகி விடுவேன் என்று நம்பும் காஜல், தான் நடித்து வந்த மொசகலு என்ற தெலுங்கு படம் திரைக்கு வர தயாராகி விட்டதால் கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறார்.
ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜெப்ரிசின் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு, ருஹானி சர்மா, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வாலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதோடு மார்ச் 11-ல் இப்படம் திரைக்கு வருகிறது. ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மொசகலு, தனது சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் காஜல்.