ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
கடந்த ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் நெடுநல்வாடை. அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கி இருந்தார். எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர், மைம்கோபி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜோஸ் பிராங்கிளின் இசை அமைத்திருந்தார், வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தற்போது சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் நெடுநல்வாடை படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி, அதனை தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் செல்வகண்ணன் கூறியதாவது: ஒரு நல்ல படைப்புக்காக நாம் சிலவற்றை தியாகம் செய்யும் போது அந்தப்படைப்பு நிச்சயம் நமக்கான அங்கீகாரத்தைத் தந்தே தீரும். அந்த நம்பிக்கைக்குச் சான்றாக இப்படத்தின் தெலுங்கு வெர்சனைப் பார்த்துவிட்டு பாராட்டுபவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது. படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.