தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பல பிரபலங்கள் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரகாஷ்ராஜூம் இணைந்திருக்கிறார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செட்டில்... மாஸ்டருடன் ஒரு பயணம். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இது. புதிய எல்லைகளை கண்டுபிடிப்பதில் ஆனந்தம் என்று பதிவிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.