Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் வருகை, தக்க வைத்துக் கொள்ளுமா திரையுலகம் ?

15 ஜன, 2021 - 12:16 IST
எழுத்தின் அளவு:
did-cine-field-to-keep-his-theartre-fans

2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரானோ தொற்று பரவ ஆரம்பித்ததும் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் எட்டு மாதங்கள் கழித்து நவம்பர் 10ம் தேதி தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் தீபாவளிக்கு சில படங்கள் வந்தாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை.

கடந்த இரண்டு மாதங்களாக 40 படங்கள் வரை வெளிவந்தாலும் மக்கள் வராத காரணத்தால் அந்தப் படங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தன. மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தால் மட்டும்தான் முடியும் என்று தியேட்டர்காரர்கள் நம்பினார்கள்.


அதற்கேற்றபடி கடந்த இரண்டு நாட்களாக இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், நேற்று வெளியான 'ஈஸ்வரன்' படத்திற்கும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.


இப்படங்களுக்கான விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, பொங்கல் கொண்டாட்ட மனநிலையுடன் ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், 'மாஸ்டர், ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களுமே மிகவும் சுமாரான படங்கள்தான். இந்தப் படங்கள் இபோதுள்ள கொரானோ சூழ்நிலையில் சாதாரண நாட்களில் இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.


கடந்த பத்து மாதங்களாக ஓடிடியில் படங்களைப் பார்க்க மக்கள் பழகிவிட்ட நிலையில் மீண்டும் அவர்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தது ஆச்சரியம்தான்.


அதிக டிக்கெட் விலை, உணவு பண்டங்கள் விலை இப்போதும் மக்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் நியாயமாக வைத்து, நல்ல தரமான படங்களைக் கொடுத்தால் மட்டும்தான் மீண்டும் வந்த மக்களை திரும்பத் திரும்ப வரவழைக்க முடியும். அதற்கான பொறுப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கும் உண்டு. அதைச் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானே வருவேன் - பழைய படப் பெயரை வைத்த செல்வராகவன்நானே வருவேன் - பழைய படப் பெயரை வைத்த ... விஜய்யின் 66ஆவது படம்- புதிய தகவல் வெளியானது! விஜய்யின் 66ஆவது படம்- புதிய தகவல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in