தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். பொங்கல் ரிலீஸாக இவர் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகியுள்ள நிலையில் பஹத் பாசிலுடன் ஜோடியாக நடித்து நின்றுபோன படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார் மாளவிகா. கடந்த 2013ல் பட்டம்போலே என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனனுக்கு 2015ல் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.
பழங்குடி இன மக்கள் இன்று சந்தித்துவரும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளையும் பற்றிய கதையம்சத்துடன் உருவாகி இருந்த, அந்தப்படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக நடித்தார் மாளவிகா மோகனன். கிட்டத்தட்ட 20 நாட்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. இன்னும் 30 சதவீத காட்சிகளே படமாக்கப்பட்ட வேண்டும் என்கிற நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, எந்த காரணங்களும் தெரியப்படுத்தாமல் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.