சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது தவிர சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை சட்டப்படி பிரிந்த பின்னர் மயக்கம் என்ன படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை 2011ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கர் என்ற மகனும் உள்ள நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார் கீதாஞ்சலி. சமீபத்தில் புத்தாண்டையும் வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் இன்று(ஜன., 7) காலை செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.