தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது தவிர சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை சட்டப்படி பிரிந்த பின்னர் மயக்கம் என்ன படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை 2011ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கர் என்ற மகனும் உள்ள நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார் கீதாஞ்சலி. சமீபத்தில் புத்தாண்டையும் வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் இன்று(ஜன., 7) காலை செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.