‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் பரவியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகள் செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர் நடிகர் சோனு சூட். புலம் பெயர் தொழிலாளர்கள், வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல, பேருந்துகள், விமானப் பயணம் என பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்தார்.
அது போல மும்பை ஜுஹு பகுதியில் உள்ள அவருடைய ஆறு மாடி கொண்ட வீட்டை டாக்டர்கள் தங்குவதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தார். மக்கள் வசிக்கும் இடத்தை வணிகப் பயன்பாடு இடமாக அவர் மாற்றியது தவறு என அவர் மீது காவல்துறையிடம் மும்பை மாநகராட்சி புகார் தெரிவித்துள்ளதாம். அது குறித்து போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
கங்கனா ரணவத் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக மும்பை மாநகராட்சியும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுத்தது போல சோனு சூட் மீதும் நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள் என பாஜக எம்எல்ஏ-வான ராம் கதம் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணவத் அலுவலகத்தை இடித்த விவகாரம் சர்ச்சையானது போல, சோனுசூட் விவகாரமும் சர்ச்சையாகும் எனத் தெரிகிறது.