சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் |
கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் பரவியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகள் செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர் நடிகர் சோனு சூட். புலம் பெயர் தொழிலாளர்கள், வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல, பேருந்துகள், விமானப் பயணம் என பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்தார்.
அது போல மும்பை ஜுஹு பகுதியில் உள்ள அவருடைய ஆறு மாடி கொண்ட வீட்டை டாக்டர்கள் தங்குவதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தார். மக்கள் வசிக்கும் இடத்தை வணிகப் பயன்பாடு இடமாக அவர் மாற்றியது தவறு என அவர் மீது காவல்துறையிடம் மும்பை மாநகராட்சி புகார் தெரிவித்துள்ளதாம். அது குறித்து போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
கங்கனா ரணவத் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக மும்பை மாநகராட்சியும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுத்தது போல சோனு சூட் மீதும் நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள் என பாஜக எம்எல்ஏ-வான ராம் கதம் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணவத் அலுவலகத்தை இடித்த விவகாரம் சர்ச்சையானது போல, சோனுசூட் விவகாரமும் சர்ச்சையாகும் எனத் தெரிகிறது.