ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'.
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் நாயகி ராஷி கண்ணா இப்படத்திற்கான அவருடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து, “சூப்பர் திறமைசாலியான விஜய் சேதுபதி உடன், மற்றுமொரு அழகான பயணம் 'துக்ளக் தர்பார்' நிறைவுக்கு வந்தது. மறக்க முடியாத இப்படத்தைக் கொடுத்த இயக்குனர் தீனதயாளன், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர், அனைவருக்கும் நன்றி. படத்தை நீங்கள் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ராஷி கண்ணா நடிக்கும் ஐந்தாவது படம் இது. 'சங்கத்தமிழன்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார்.