ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஆனந்தி. பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கு நடித்து வந்தவர், பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு கயல், சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, என் ஆளோட செருப்ப காணோம். விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்து முடித்துள்ள டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. ஏஞ்சல், ராவணகூட்டம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று(ஜன 7) இரவு 8 மணிக்கு வாரங்கல்லில் உள்ள கோடம் கன்வென்சன் செண்டரில் ஆனந்திக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் பெயர் சாக்ரட்டீஸ். இது பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த திடீர் திருமணத்திற்கான காரணம் தெரியவில்லை.




