ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஆனந்தி. பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கு நடித்து வந்தவர், பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு கயல், சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னான நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, என் ஆளோட செருப்ப காணோம். விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்து முடித்துள்ள டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. ஏஞ்சல், ராவணகூட்டம் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று(ஜன 7) இரவு 8 மணிக்கு வாரங்கல்லில் உள்ள கோடம் கன்வென்சன் செண்டரில் ஆனந்திக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் பெயர் சாக்ரட்டீஸ். இது பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த திடீர் திருமணத்திற்கான காரணம் தெரியவில்லை.