22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
எதையும் புதுமையாக செய்கிறவர் பார்த்திபன், இயக்குனர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர். அவர் 2021ம் ஆண்டுக்கான டிஜிட்டல் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காலண்டரில் 12 மாதத்திற்கும் ஏற்ற மாதிரி போஸ் கொடுத்துள்ளார். கவிதையும் எழுதி உள்ளார். அந்த கவிதைளில் சில சாம்பிள்கள் வருமாறு:
ஜனவரி
ஜனங்களின் வரி
பணத்தில் வறுமை கோட்டை அழிப்பதே
ஓட்டுக்காகத் தரும்& பெரும் லஞ்சமாகும்.
பிப்ரவரி
பிப்-வரிந்து கட்டிக்கொண்டு பிறர்க்கு நல்லதும்
ஆருயிர் தோழனான நம் ஆரோக்கியம் காக்க
உடற், மூச்சு பயிற்சியும் செய்வோம்க்ஷ
என் ஜாண் உடம்மை மீறி என்ன
என்ஜாய்ன்மெண்ட்?
மார்ச்
மாச்சர்யம் இல்லா மனம் பூச்சொரியும்
ஏப்ரல்
முட்டாள் என்பதை
முட்டாத-ஆள் என்றும் பொருள் காணலாம்
பொருள் காண, புகழ்காண
வாய்ப்பிற்காக வாசற் கதவை
சுயமரியதை இழந்து
முட்டாத ஆள்.
இப்படியாக 12 மாதங்களுக்கும் கவிதை எழுதியுள்ளார் பார்த்திபன்.