'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் |
எதையும் புதுமையாக செய்கிறவர் பார்த்திபன், இயக்குனர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர். அவர் 2021ம் ஆண்டுக்கான டிஜிட்டல் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காலண்டரில் 12 மாதத்திற்கும் ஏற்ற மாதிரி போஸ் கொடுத்துள்ளார். கவிதையும் எழுதி உள்ளார். அந்த கவிதைளில் சில சாம்பிள்கள் வருமாறு:
ஜனவரி
ஜனங்களின் வரி
பணத்தில் வறுமை கோட்டை அழிப்பதே
ஓட்டுக்காகத் தரும்& பெரும் லஞ்சமாகும்.
பிப்ரவரி
பிப்-வரிந்து கட்டிக்கொண்டு பிறர்க்கு நல்லதும்
ஆருயிர் தோழனான நம் ஆரோக்கியம் காக்க
உடற், மூச்சு பயிற்சியும் செய்வோம்க்ஷ
என் ஜாண் உடம்மை மீறி என்ன
என்ஜாய்ன்மெண்ட்?
மார்ச்
மாச்சர்யம் இல்லா மனம் பூச்சொரியும்
ஏப்ரல்
முட்டாள் என்பதை
முட்டாத-ஆள் என்றும் பொருள் காணலாம்
பொருள் காண, புகழ்காண
வாய்ப்பிற்காக வாசற் கதவை
சுயமரியதை இழந்து
முட்டாத ஆள்.
இப்படியாக 12 மாதங்களுக்கும் கவிதை எழுதியுள்ளார் பார்த்திபன்.