ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'காத்திருந்த அன்பு உள்ளங்களுக்காக இதோ உங்கள் முன்னால்' என, ஆயிரத்தில் ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் செல்வ ராகவன், படத்தின் போஸ்டரையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழ மன்னர்கள் குறித்து வரலாற்று படமாக வெளியாகி, விமர்சகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. தற்போது பல படங்களுக்கும் இரண்டாம் பாகம் வெளியாகி வரும் நிலையில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என செல்வராகவனிடம் பலரும் கேள்வி கேட்க துவங்கினர்.
இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன்-2 அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ''இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்'' என தனுஷ் டுவிட்டர் கணக்கை இணைத்து படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் டுவிட்டை பகிர்ந்த தனுஷ், ''செல்வாவின் கனவுப்படம் இது. படத்தின் முன் தயாரிப்பு பணிக்கு மட்டும் ஒரு ஆண்டு தேவைப்படும். 2024ல் இளவரசன் திரும்புகிறான்'' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இப்படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது.