சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
முத்தம் கொடுத்தது மன்னிக்க முடியாத தவறு ஒன்றுமில்லை. அது அன்பின் வெளிப்பாடுதான் என்கிறார் சிம்பு. ஏற்கனவே வல்லவன் படத்தில் நயன்தாராவின் உதடு கவ்வி இவர் கொடுத்த முத்தம் அந்த நேரத்தில் டீன்ஏஜ்களின் ஹாட் டாப்பிக்காக இருந்தது. அதையடுத்து சமீபத்தில் வெளியான கொலைவெறி அனிருத்-ஆன்ட்ரியா முத்தக்காட்சி படங்கள் இன்னும் பெரிய அளவில் பரபரப்பு கூட்டி விட்டது. ஆனால் இதை மீடியாககள் கொச்சைப்படுத்துவது போல் செய்தி வெளியிட்டன. ஆனால் சிம்புவோ, என்னைப்பொறுத்தவரை ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது நல்ல விசயம்தானே. முத்தம என்பது அன்பின் வெளிப்பாடு, நட்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு இப்படி எத்தனையோ விதம அதில் இருக்கிறது.
அதனால் யார் முத்தம் கொடுத்தாலும் அதை தப்பான கண்ணோட்டததில் பார்ப்பதை முதலில் விட்டு விடுங்கள். அதை ரசியுங்கள். அப்போதுதான்அந்த முத்தத்தில் உள்ள அழகு தெரியும். என்னைகூட வல்லவன் படத்துக்குப்பிறகு நிறைய கமெண்ட் அடித்தனர். ஆனால் நான் எதையும செவிகொடுத்தே கேட்கவில்லை. இபபோதுகூட அந்த போட்டோக்களை பார்த்து ரசிக்கிறேன். காரணம் எனக்கு ரசனை அதிகம் என்கிறார் சிம்பு.