'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகும் ஒவ்வொரு நடிகைக்குமே அடுத்து பாலிவுட்டில் கொடியேற்ற வேண்டும் என்பதுதான் தீராத கனவாக இருக்கும். அந்த வரிசையில் ஸ்ரீதேவிக்கு பிறகு பல நடிகைகள் இங்கிருந்து இந்தி சினிமாவுக்கு சென்றதில் அசின் பெரிய அளவில் தற்போது புகழ் பெற்றிருக்கிறார். அதனால் அடுத்தடுத்து காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகள் இந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் நண்பன் படத்தில் நடித்த இலியானாவும் அந்த படத்தை முடித்த கையோடு இந்தியில் ரன்பீர்கபூர் நடித்த பர்பி படத்தில் நடித்தார். படம் வெற்றி பெற்றதோடு, இலியானாவின் நடிப்பும் அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இதனால் மேலும் புதிய படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், இனி அசினைப்போன்று மும்பையிலேயே செட்டிலாகி முழு நேர இந்தி நடிகையாகப்போவதாக கூறுகிறார்.