ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரம்மாண்ட படங்களான பாகுபலி மற்றும் பாகுபலி-2 படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இந்த இரு படங்களும் உலக அளவில் வெற்றிகரமாக ஓடி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்ததால், ராஜமவுலி, இந்திய அளவில் பிரபலமானார். அவரை வைத்து படம் தயாரிக்க, இந்திய அளவில் படத் தயாரிப்பாளர்கள் பலரும் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், அவரது மகன் கார்த்திகேயாவின் திருமணம், ஜெய்ப்பூரில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிகப் பிரம்மாண்டமாக நாளை நடக்கவிருக்கிறது. இதற்காக, இந்தியாவின் முக்கிய நபர்கள் எல்லாம், ஜெய்ப்பூருக்கு செல்கின்றனர். நட்சத்திர ஓட்டலே விழாக் கோலம் பூண்டிருக்கும் நிலையில், முதல் ஆளாக, பாகுபலி படத்தில் நாயகியாக நடித்த அனுஷ்கா இரு நாட்களுக்கு முன்னதாகவே ஜெய்ப்பூருக்கு சென்று விட்டார்.
திருமண நிகழ்ச்சிக்கு வரும் முக்கிய பிரமுகர்களை மணமகன் கார்த்திகேயாவும் மணமகள் பூஜா பிரசாத்தும் இணைந்து வரவேற்கின்றனர்.